10ம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து 'எஸ்கேப்' ஆன கல்யாண சுந்தரம் எங்கே?
புதுச்சேரி: பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து சிக்கி தமிழக போலீஸாரின் பிடியில் சிக்காமல், சம்மனையும் வாங்காமல் தொடர்ந்து தலைமறாவாக இருந்து வரும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாண சுந்தரம் எங்கே என்பது பெரும் மர்மமாக உள்ளது. அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் இரண்டு முறையும், கோர்ட் ஒரு முறையம் சம்மன் அனுப்பியும் கூட அவர் அதைப் பெறாமல் தப்பி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வின்போது தனக்குப் பதில் வேறு ஒருவரை செட்டப் செய்து அனுப்பி பரீட்சை எழுதச் செய்தார் கல்யாண சுந்தர் என்பது குற்றச்சாட்டாகும். இதையடுத்து கல்யாண சுந்தரம் மீது விழுப்புரம் மாவட்ட குற்றவியல் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மொத்தம் 8 பிரிவுகளில் அவர் வழக்கு பாய்ந்துள்ளது.
இதையடுத்து விசாரணைக்கு நேரில் வருமாறு கல்யாண சுந்தரத்துக்கு போலீஸார் கடந்த 9ம் தேதி சம்மன் அனுப்பினர். இதை சபாநாயகர் சபாபதி பெற்றுக் கொண்டார். 2 நாளில் கல்யாண சுந்தரத்தை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். ஆனால் சொன்னபடி கல்யாணம் வரவில்லை. இதையடுத்து கல்யாண சுந்தரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபாபதி, சம்மனை 2 பேரை விட்டு போலீஸாரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
இதையடுத்து 15ம் தேதி இன்னொரு சம்மன் போனது. இதையும் கல்யாணசுந்தரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி சபாநாயகர் திருப்பி அனுப்பி விட்டார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் திண்டிவனம் 1வது நீதித்துறை நடுவர் பிரகாஷ் முன்பு போலீஸார் ஒரு மனு செய்தனர். அதில், அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் கையெழுத்தை சோதனை செய்ய வேண்டும் எனவும் அதற்காக கோர்ட் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரகாஷ், விழுப்புரம் குற்றவியல் கோர்ட் அல்லது போலீஸார் முன்பு நாளைக்குள் நேரில் ஆஜராகுமாறு கல்யாணசுந்தரத்திற்கு சம்மன் போனது.
ஒருவேளை நேரில் ஆஜராக முடியாவிட்டால் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு தபால் மூலம் கல்யாணசுந்தரத்தின் வீடு, அலுவலகத்திற்குப் போயுள்ளது. ஆனால் இதுவரை இதுகுறித்து கல்யாண சுந்தரத்திடமிருந்து எந்த சத்தத்தையும் காணோம்.
வெள்ளிக்கிழமை, கல்யாணசுந்தரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில் கிடைக்கும் முடிவைப் பொறுத்தே கல்யாண சுந்தரம் ஏதாவது நகர்த்தலை மேற்கொள்வார் என்று தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications