தமிழகத்தில் யானைகளுக்கு இனி வாரத்தில் 5 நாள் தான் வேலை- 60 வயதில் 'ரிடையர்மெண்ட்'!

Subscribe to Oneindia Tamil

Elephant
சென்னை: யானைகளுக்கு 60 வயதில் ரிடையர்மெண்ட் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கோவில் யானைகளுக்கு ஓய்வும் புத்துணர்ச்சியும் அளிக்க முகாம்கள் நடத்தப்பட்டன. இந் நிலையில் இப்போது யானைகளுக்கு மேலும் பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வன விலங்குகள் சட்டத்தின் யானைகள் நிர்வாக விதிகளில் பல திருத்தங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, யானைகளை தெருக்களில் நடக்க வைத்து பிச்சை கேட்க வைப்பது போன்ற செயல்கள் முழு அளவில் தடை செய்யப்படுகின்றன. யானைகளை அடிப்பது, உதைப்பது, நீண்ட தூரம் நடக்க வைப்பது, அதிக சுமையை ஏற்றுவது, கொடுமைப்படுத்துவது ஆகியவை கடும் குற்றங்களாகும்.

அவை செக்ஸ் ரீதியில் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான காலத்தில் இருக்கும்போது அவைகளை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

மேலும் நைலான் கயிறு, இரும்பு சங்கிகளால் யானைகளைக் கட்டிப் போடுவதும் குற்றமாகும்.

யானைகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் தான் வேலை தர வேண்டும். மழைக் காலத்தில் முழு ஓய்வு தர வேண்டும்.

அதே நேரத்தில் யானைகளுக்கு 60 வயதில் ரிடையர்மெண்ட் தரப்பட்டுவிட வேண்டும். 60 வயதுக்கும் மேலான யானைகள் ஆரோக்கியமாக இருந்தால், கால்நடை மருத்துவரிடமும் தலைமை வனத்துறை வார்டனிடமும் உரிய சான்றிதழ் பெற்று, அவற்றை பயன்படுத்தலாம். ஆனால், கடுமையான பணிகளைத் தரக் கூடாது. எளிதான பணிகளைத் தருவதோடு யானைகளை உரிய முறையில் நலம் பேணவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+