நிதி நெருக்கடியை போக்க ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை யோசனை

மத்திய அரசு நிறுவனங்களில் அதிக ஊழியர்களை கொண்டது துறை இந்தியன் ரயில்வே. ரயில்வே துறையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு நிறுவனங்களில் 6வது சம்பளக் கமிஷன் பரிந்துறை செயல்படுத்தப்பட்டது.
ரயில்வே துறையில் அதிக பணியாளர்கள் உள்ள நிலையி்ல், 6வது சம்பள கமிஷன் பரிந்துறை அமல்படுத்தப்பட்டதால், 50 சதவீத வருமானம், பணியாளர்களின் சம்பவத்திற்கே ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே துறையில் திட்டமிடப்பட்ட பல்வேறு பணிகள் தடைப்பட்டுள்ளது.
இதை நிவர்த்தி செய்ய 21 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்பட்டது. இந்த தொகையை கடனாக வழங்குமாறு மத்திய அரசிடம் ரயில்வே துறை கேட்டது. ஆனால் மத்திய நிதியமைச்சகம் இதற்கு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த நஷ்டத்தை நிவர்த்தி செய்ய, ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது,ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ரயில் பயணக் கட்டணத்தை உடனடியாக உயர்த்துமாறு, திட்ட கமிஷன், நிதி இலாகா, ரயில்வே தொழிற்சங்கங்கள் என பலதரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
ஆனால் ரயில்வே கட்டண உயர்வு மூலம் சாதாரண மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பது ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியின் விருப்பம். இதனால் கட்டண உயர்வை முதலில் ஏ.சி.வகுப்பு பெட்டிகளில் அமல்படுத்தலாம் என தெரிகிறது. இதன்மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டு வருமானத்தில் 4,000 கோடி ரூபாய் அதிகரிக்கும்.
ஆனால் இந்த தொகை மூலம் ரயில்வே துறையின் நஷ்டத்தை நிவர்த்தி செய்ய முடியாது. எனவே விரைவில் அனைத்து வகுப்புகளிலும் 20 முதல் 25 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது, என்றனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications