உளாட்சித் தேர்தலில் அதிமுக அலையில் அடித்துச் செல்லப்பட்ட கொமுக: தொண்டர்கள் அதிர்ச்சி
கோவை: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் ஆரவாரத்துடன் துவங்கப்பட்டது கொங்குநாடு முன்னேற்ற கழகம். அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கனிசமான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது.
கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே படுதோல்வியடைந்தது. தொடர்ந்து தோல்வியடைந்தாலும் நம்பிக்கையை மட்டும் அக்கட்சி இழக்கவில்லை.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த முறையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தொடர் தோல்விகளால் கொமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications