லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் சொந்த ஊரில் எரிபொருள் டேங்க் வெடித்து 100 பேர் பலி
திரிபோலி: முன்னாள் லிபிய அதிபர் கடாபியின் சொந்த ஊரான ஷிர்தேவில், எரிபொருள் டேங்க் ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில், எரிந்து, கருகிய உடல்களாக கிடக்கிறது.
ஷிர்தேவில் வைத்துத்தான் கடாபியும், அவரது மகனும் சமீபத்தில் புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை நான்கு நாட்கள் காட்சிக்கு வைத்து பின்னர் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் ஷிர்தேவில் உள்ள ஒரு எரிபொருள் டேங்க் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தப் பகுதி முழுவதும் எரிந்து போன, கருகிப் போன உடல்களாக காட்சியளிக்கிறது.
மிகப் பெரிய சத்தத்துடன் டேங்க் வெடித்துச் சிதறியதாகவும், உடல்கள் சிதறிக் கிடப்பது பார்க்கவே கொடூரமாக இருப்பதாகவும் புரட்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் டேங்குக்கு யாரேனும் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications