5 நாடுகளின் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை.. கவலையில் இந்திய சுற்றுலா துறை
டெல்லி: தீபாவளியையொட்டி இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியாவுக்கு பயணம் செய்பவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுபோத் கந்த் சஹாய் கூறுகையில்,
இதுபோன்று எச்சரிக்கை விடுப்பது இந்தியாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செயலாகும். இது தொடர்பான நமது எதிர்ப்பு அந்த நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பது வழக்கம். இதனால் விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் பெரும் லாபம் அடைவதுண்டு. ஆனால், இந்த 5 நாடுகள் ஒரே நேரத்தில் வெளியிட்ட இந்த எச்சரிக்கையால், சுற்றுலா சார்ந்த துறைகள் இந்த பண்டிகை காலத்தில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications