பைக் விபத்தில் மூளை சாவு: சென்னை மாணவரின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்
சென்னை: சென்னை அயனாவரத்தை சேர்ந்த ராகுல் (17) அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். சமீபத்தில் இவருக்கு ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை பெற்றோர் வாங்கித் தந்தனர்.
கடந்த திங்களன்று இவர் தனது நண்பர்களுடன் பைக்கில் அதி வேகத்தில் சென்றார். ஹெல்மட் கூட அணியாமல் வேகமாக சென்ற இவரது பைக் பாடி மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகுலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து முதலில் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகுல் கோமா நிலைக்குச் சென்றார். மூளையில் பலத்த அடி பட்டதால், அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகுலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ராகுவின் இதயம், நூரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இவை 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications