இந்துக்களுக்கு எதிரான மத துவேஷம்-சோனியா மீது சாமி புகார்

Subscribe to Oneindia Tamil

Subramanian Swamy
டெல்லி: மதக் கலவர தடுப்புச் சட்டத்தின் மூலம் இந்துக்களுக்கு எதிரான மதத் துவேஷத்தைப் பரப்ப முயல்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி புகார் தாக்கல் செய்துள்ளார்.

இந்த சட்ட மசோதாவை இறுதி செய்துள்ள தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சோனியா மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A & B, 295A, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சாமி கோரியுள்ளார்.

இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாக சாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்கள் தான் மதக் கலவரத்தைத் தூண்டி விடுவோர் என்பது போலவும், மற்ற சிறுபான்மையினர் பாதிப்புக்கு மட்டுமே ஆளாவோர் என்பது போலவும் இந்த மசோதாவின் தொனி அமைந்துள்ளது.

இந்த மசோதா மூலம் வெவ்வேறு மதத்தினர் இடையே அவநம்பிக்கை தான் உருவாகும். இது போன்ற ஒரு சட்டத்தை வைத்திருந்தால், எல்லை தாண்டி வந்து லஷ்கர் ஏ தொய்பாவும், ஹர்கத் உல் ஜிகாதி இ்ஸ்லாமியும் தீவிரவாதத்தை தூண்டிவிட வேண்டிய அவசியமே இல்லை, அதற்குப் பதிலாக இந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்குள் ஒரு சிறிய மதக் கலவரத்தை தூண்டிவிட்டாலே போதும், அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.

இது போன்ற ஒரு மசோதாவை உருவாக்கிய சோனியா காந்தியும் அவருடன் இணைந்து இதை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் உறுப்பினர்களும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A & B, 295A, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தவறு செய்தவர்கள் ஆகிறார்கள். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமி கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+