திருவண்ணாமலை அருகே அதிமுக பிரமுகர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அதிமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள அரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(30). அதிமுக பிரமுகர். இவர் அரியாங்குப்பம் அருகே உள்ள ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இதில் குமாரின் மார்பில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.












Click it and Unblock the Notifications