அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி கே.என். நேருவின் தங்கை மகன் மரணம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தங்கை மகன் பிரசாந்த் அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தங்கை உமாதேவி. அவருக்கு தீபிகா என்ற மகளும், பிரசாந்த்(21) என்ற மகனும் உள்ளனர். உமாதேவி தனது குடும்பத்தோடு கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் நேருவின் மகன் அருணுக்கும், தீபிகாவும் நிச்சயதார்த்தம் நடந்தது. பிரசாந்த் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேற்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்கச் சென்றார்.
ஏரியை அடைந்ததும் அவர் அதில் குதித்தார். அப்போது அவரது தலையில் பலமாக அடிபட்டது. உடனே அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரசாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரசாந்தின் உடல் விமானம் மூலம் இன்றிரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறது. இந்த தகவல் அறிந்த நேரு இன்று காலை சென்னை புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications