பிரபாகரனுக்கு பொது மன்னிப்பு அளிக்க தயாராக இருந்தது இலங்கை - விக்கிலீக்ஸ்

Subscribe to Oneindia Tamil

Prabhakaran
லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருந்ததென விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் ராபர்ட் ஒ பிளாக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சேவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இதுகுறித்து பேசப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற சிங்கள தேசியவாத கட்சிகள் அதிருப்தி அடையக் கூடும் என கோதபாய தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டால் அந்த முயற்சியில் பயனிருக்காது என பிளாக் தெரிவித்துள்ளார். இலங்கை பின்னர் தனது இந்த முடிவை மாற்றிக் கொண்டதையும் இந்த தகவல் பரிமாற்றத்தில் தெரிவித்துள்ளார் பிளாக்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிளாக் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தம், பாதுகாப்பு வலயம் மற்றும் பொதுமக்களை மீட்டல் தொடர்பான கலந்துரையாடல்களின்போதுதான் கோத்தபாய இந்த தகவல்களை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளார்.

அதேவேளை, பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டால் அவரைக் கைது செய்வதற்கு உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா இலங்கைக்கு உறுதியளித்திருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி ராபர்ட் ஓ பிளாக் அமெரிக்க தூதரகம் மூலம் அனுப்பிய கேபிளில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+