தமிழகத்தில் பாஜகவுக்கு 15% வாக்கு வங்கி உள்ளது: தமிழிசை சவுந்தர்ராஜன்
அறந்தாங்கி: தமிழகத்தில் பாஜக 15 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளதாக அக் கட்சியின் மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது தமிழக மக்கள் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தள்ளனர் என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜக 15 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று சொன்ன காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி விழுந்துள்ளது. வரும் நாடாளுமன்பத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.
ஊழல் செய்து நாட்டை சுடுகாடாக்கிய காங்கிரசுக்கு, பாஜக மட்டும்தான் மாற்று சக்தி என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டனர்.
தேசிய அளவிலும், தமிழக அளவிலும் அத்வானியின் ரத யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications