குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை அன்னா வாயைத் திறக்காமல் இருக்கட்டும்: திக்விஜய்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடியும் வரை அன்னா ஹசாரே மௌன விரதத்தை தொடரட்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திக்விஜய் சிங் கூறியதாவது,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடியும் வரை அன்னாவும், அவரது குழுவினரும் மௌன விரதம் இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மகராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவருக்கு பெங்களூரில் ஆசிரமம் உள்ளது. அப்படி இருக்கையில அவர் எதியூரப்பா அரசின் ஊழல் பற்றி மூச்சேவிடவில்லை. ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள் பற்றியும் அவர் வாய்திறக்கவில்லை. ஆனால் அவர் இந்தியாவில் இருந்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவில் ஊழலுக்கு எதிரான சக்திவாய்ந்த லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் மக்களுக்கு உறுதியளித்துள்ளது என்றார்.