மிட்டாய் தருவதாகக் கூறி மனநலம் குன்றிய பெண்ணை சீரழித்த விவசாயி கைது
Subscribe to Oneindia Tamil
வள்ளியூர்: வடக்கன்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகேயுள்ள கணக்கர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரம்மாள். அவரது மகள் கவிதா. மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் தனது பெற்றோர் பராமரிப்பில் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவதன்று கவிதா தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று கவிதாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கவிதாவின் தாய் சங்கரம்மாள் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜிடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications