கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கலாம் அளித்த சான்றிதழை ஏற்க மாட்டோம்: உதயக்குமார்

மேலும், அப்துல் கலாம் ஒரு வி்ஞ்ஞானி போல பேசவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்து விட்டு அவர் போய் விட்டார் என்றும் உதயக்குமார் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் வரும்போது எங்களையும் சந்திப்பார், எங்களது மக்களிடம் குறைகளை கேட்பார் என நம்பியிருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
இதை விட சிறந்த தொழில்நுட்பம் தேவை என்று அப்துல் கலாம் எழுதியுள்ள கட்டுரை இந்து நாளிதழில் வந்துள்ளது. ஆனால் இன்று கூடங்குளம் அணு மின் நிலையப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார் கலாம். இது நேர் மாறாக, முரண்பாடாக உள்ளது.
இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அணு மின் நிலையம் என்றால் இதேபோல ஒன்றை கேரளாவில் போய் அவர்கள் அமைக்க முடியுமா? ஏன், மேற்கு வங்கத்தில் கூட நான்கை ஆரம்பிக்கட்டுமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.
கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அப்துல்கலாம் 40 பேரை சந்தித்ததாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. 40 பேரும் கூலிக்கு மாரடிப்பவர்களாக கூட இருக்கலாம்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கொஞ்சம் கழிவுதான் வெளியேறும் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது என்ன பேச்சு வி்ஞ்ஞானிகள் போல அவர்கள் பேச வேண்டும். கொஞ்சம் என்றால் எத்தனை டன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
மேலும் இந்தப் பகுதியில் சுனாமி வராது, பூகம்பம் வராது என்று உத்தரவாதம் தரத் தயாரா? சுனாமி வந்தபோது 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை கடல் அலைகள் மூடியதை அத்தனை பேரும் பார்த்தோம். அப்படி இருக்கையில் 13.5 அடி உயரமே கொண்ட இந்த அணு உலைகளை கடல் அலைகள் மூடாதா?.
எங்களுக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்தியாவுக்கு மின்சாரம் தேவைதான். அதை உற்பத்தி செய்ய பல மாற்று வழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும்,முக்கிய நகரங்களிலும் பல்வேறு வகையான மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றலாம். அதைச் செய்யாமல் அணு உலைகளை நிறுவுவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க மாட்டாம்.
கூடன்குளம் அனுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என உதயகுமார் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications