தூத்துக்குடியில் தொடர் மழையால் 75,000 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால், 75,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை துவக்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. விவசாயத்திற்கு போதுமான அளவு மழை பெய்துள்ளதால் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் விவசாயிகள் முக்கிய விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.

ஏரி, குளங்கள், கண்மாய்கள் சுமார் 40 சதவீதம் வரை நிறைந்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 75,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தொடர்ந்து, வீடுகள், குடிசைகள், குடியிருப்புகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் இதுவரை 101 வீடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் இடிந்துள்ளன. இதனை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவதற்கு வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+