For Daily Alerts
Just In
செங்கோட்டையில் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க கோரி கம்யூ ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை: டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் விலை உயர்வை ரத்து செய்ய கோரி செங்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை காந்தி சிலை முன்பிருந்து புறப்பட்ட கம்யூ கட்சியினர் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். வழிநெடுகிலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டு வந்தனர். மேலும் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து வாகனஙகள் செல்லமுடியாமல் மறியல் செய்தனர். மேலும் மத்தியில், மாநிலத்தில் உள்ள அரசுகளை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 118 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மறியலில் சிஐடியூ சார்பில் பெருமாள், ராமர், ஏஐடியூசி சார்பில் சாமி, எல்டிஎப் சார்பில் சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
English summary
Communist party cadres agitated against Petrol price hike in Senkottai. Many cadres attended the protest. Later police arrested 118 cadres and released.
Story first published: Tuesday, November 8, 2011, 17:36 [IST]