வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்கமுடியாது- அன்னா குழு மீது சோனியா பாய்ச்சல்
ரிஷிகேஷ்: அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டங்கள் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் - அதுவும் காட்டமாக. வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியெடுத்த நேரத்தில் சோனியா காந்தி எதுவும் பேசவில்லை. மேலும் அவருக்கு உடல் நலமும் சரியில்லை. அமெரிக்காவில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் சரியான பின்னர் முதல் முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும் காய்ச்சல் காரணமாக அவர் வரவில்லை. மாறாக தனது பேச்சை எழுத்துப்பூர்வமாக அவர் அனுப்பியிருந்தார்.
சோனியா காந்தியின் பேச்சை காங்கிரஸ் தலைவர் சத்பால் மகராஜ் வாசித்தார்.
அதில் சோனியா கூறியிருப்பதாவது:
லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று பிரதமரே உறுதியளித்து விட்டார். அதற்குப் பின்னரும் ஏன் அமளி துமளியை எழுப்புகிறார்கள் என்று புரியவில்லை.
வெறும் பேச்சுக்களால் ஊழலை ஒழிக்க முடியாது.தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வர நான்தான் பாடுபட்டேன், தொடக்க நடவடிக்கைகளை எடுத்தேன் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அரசு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளது. அதைக் கடைப்பிடிக்க கடுமையாக முயன்று வருகிறது. பிறகு ஏன் சத்தம் எழுப்புகிறார்கள்? என்று தனது உரையில் கூறியிருந்தார் சோனியா.
ராசா ஏன் சிறையில் இருக்கிறார்?-சோனியாவிடம் விளக்கம் கேட்கும் பாஜக
சோனியா காந்தியின் பேச்சு குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர்கள் கூறுகையில், சோனியா காந்தி பேசுவது இருக்கட்டும். அவரது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அவர் விளக்க வேண்டும். ராசா ஏன் சிறையில் இருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். ப.சிதம்பரத்தை இதுவரை ஏன் விசாரணைக்கு உட்படுத்தாமல் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications