பாலி தீவில் கிழக்காசிய மாநாடு- ஒபாமாவை சந்திக்கிறார் மன்மோகன் சிங்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற உள்ள கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்தவாரம் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு செல்ல இருக்கிறார். அப்போது அங்கு வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை மன்மோகன் சிங் சந்தித்துப் பேச உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒபாமா இந்தியாவிற்கு வந்து சென்ற பின்னர் இந்த ஆண்டு இருவரும் முதல் முறையாக சந்தித்து பேச உள்ளனர்.
ஆசியா – பசுபிக் மண்டல நாடுகளுடன் சுமூக உறவு மேம்படுத்துவதையே அமெரிக்க விரும்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒபாமா நவம்பர் மாத மத்தியில் நட்புரீதியிலான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆஸ்திரேலியா செல்லும் அவர் அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். பின்னர் இந்தோனேசியா செல்கிறார். அங்கு நடைபெறும் கிழக்காசிய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் ஒபாமா நவம்பர் 18 ம் தேதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இருப்பினும் அப்போது அவர் ஒபாமாவை சந்திக்கவில்லை. மேலும் எந்த முக்கிய நாட்டின் தலைவரையும் அவர் அப்போது சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications