கடும் நிதி நெருக்கடியில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.. 130 பைலட்டுகள் விலகல்!

அதே போல ஏர்பஸ் ஏ-320 விமானங்களில் இதற்கான மறுகட்டமைப்பு செய்யும் பணி காரணமாக் தான், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கிங்பிஷர் கூறியதும் தவறான தகவல் என்று தெரிய வந்துள்ளது. உண்மையான காரணம், கடந்த சில வாரங்களில் 130 பைலட்டுகள் ராஜினாமா செய்துவிட்டுப் போயுள்ளதே.
நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக் கொண்டு பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் தராததோடு, விமானங்களை லீசுக்கு விட்ட நிறுவனங்களுக்கு பணமும் செலுத்தவில்லை கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா. இதையடுத்து இந்த நிறுவனங்கள் விமானங்களை திரும்ப ஒப்படைக்குமாறு மல்லையாவை நெருக்க ஆரம்பித்துள்ளன.
மேலும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் விமான எரிபொருளுக்கான கட்டண பாக்கியும் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்கள் எரிபொருள் தர மறுத்து வருகின்றனர்.
ஊதியம் வழங்கப்படாததால், பைலட்டுகள் ஏராளமானோர் ராஜினாமா செய்துவிட, மற்றவர்கள் உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு லீவில் போய்விட்டனர்.
இந்தக் காரணங்களால், தான் 36 சதவீத விமான சேவைகளை கிங்பிஷர் ரத்து செய்துள்ளது. விமானங்களை ரத்து செய்ய செய்ய, நஷ்டமும் குறையும் என்பதால், முடிந்தவரை விமான சேவைகளை கிங்பிஷர் ரத்து செய்து வருகிறது.
இந்த நிதித் தட்டுப்பாட்டிலிருந்து மீள சில வங்கிகளின் உதவியை மல்லையா நாடியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடமானமாக தான் கட்டி வரும் மாபெரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வங்கிகளிடம் ஒப்படைக்கவும் அவர் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே விரைவிலேயே கிங்பிஷர் நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துவிட்டு மூடப்படும் என்றும் செய்திகள் பரவியுள்ளன. இதை, கிங்பிஷர் நிறுவனம் மறுத்துள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு வேண்டிய உதவிகளை மல்லையாவின் யுபி குரூப் தொடர்ந்து வழங்கி வருவதாக அதன் செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால்.
இந்த குழப்பங்களையடுத்து கிங்பிஷர் பங்குகளின் விலை 18 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன.
இந் நிலையில் கிங்பிஷருக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிறுவனத்துக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுத் தர விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பேசி வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications