உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து விடுவேன் என அஞ்சுகிறது மத்திய அரசு-சீமான்
வேலூர்: உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்து விடுவேன் என்ற அச்சத்தினால்தான் அமெரிக்கா, கனடா செல்வதற்கு மத்திய அரசு மூலம் தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் சிறையில் இருக்கும் மூவரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப் பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தி எங்கள் உணர்வை வெளிபடுத்தி வருகிறோம்.
சிறையில் உள்ள 3பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
முதலமைச்சர் மீது நம்பிக்கை
தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 2008-ல் இருந்து 10 ஆண்டுகள் அமெரிக்கா, கனடா செல்ல விசா எடுத்து உள்ளேன். தற்போது சர்வதேச அளவில் தமிழர்களை நான் ஒருங்கிணைந்திடுவேன் என்ற அச்சம் காரணமாக எனக்கு அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications