வெளிநாட்டு கைதிகள் வழக்குகளை ஏன் ஜவ்வாய் இழுக்கிறீர்கள்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: இந்திய சிறைகளில் இருக்கும் வெளிநாட்டு கைதிகளின் வழக்குகளை விரைந்து முடிக்காமல் அவர்களை வாடவிடுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய சிறைகளில் பல வெளிநாட்டு கைதகிள் உள்ளனர். அவர்களின் வழக்குகள் விரைந்து முடிக்காமல் இழுத்தடிக்கப்படுவதால் ஆண்டுக்கணக்கில் அவர்கள் சிறையில் வாடுவது பற்றி அறிந்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெளிநாட்டுக் கைதிகளின் வழக்குகள் ஏன் நிலுவையில் உள்ளன என்று மத்திய அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வழக்குகள் இழுத்துக் கொண்டே போவதால் பல வெளிநாட்டு கைதகிள் இந்திய சிறைகளில் ஆண்டுக் கணக்கில் வாடுகின்றனர். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தான் கைதிகள் எத்தனை பேர், என்னென்ன குற்றங்களுக்காக சிறைகளில் உள்ளனர் என்ற விவரத்தை அளிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications