தமிழக அரசின் இலவச சைக்கிள்: பச்சையில் இருந்து மெருனுக்கு மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 6 லட்சம் +1 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ள இலவச சைக்கிள்கள் வழக்கமான பச்சை நிறத்துக்கு பதிலாக இந்த ஆண்டு மெருன் நிறத்தில் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் பள்ளிப் படிப்பை தொடரும் வகையி்ல் +1 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள்கள் வழக்கமாக பச்சை நிறத்தில் தான் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மெருன் நிறத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்க முதல்வர் ஜெயலலிதா ரூ.148 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார்.
இலவச சைக்கிள் உதிரிப் பாகங்கள் பஞ்சாபில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு பள்ளிகளில் இறக்கி முழு சைக்கிள்களாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. தினமும் சுமார் 150 சைக்கிள்கள் வரை இணைக்கப்படுவதாக அந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சைக்கிள்களை காட்டிலும் இந்த ஆண்டு வழங்கப்படவிருக்கும் மெருன் நிற சைக்கிள்கள் பார்க்க மிக அழகாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications