உத்தபுரம் பிரச்சனை: ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டு
சென்னை: உத்தபுரத்தில் ஒரு ஜாதி பிரச்சனையைத் தீண்டாமைப் பிரச்சனையாக மாற்றி, தலித் விரோதமாகச் சித்தரித்து ஊதி ஊதி பெரிதாக்கியது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி என்றும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு கண்ட தமிழக அரசை பாராட்டுவதாகவும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22 ஆண்டுகளாக, மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினரிடையே இருந்த கசப்பு உணர்வை நீக்கி ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி சுமூகமான தீர்வு கண்ட தமிழக அரசை இந்து முன்னணி பாராட்டுகிறது.
இந்து மதத்தில் தீண்டாமையை அனுமதிக்க மாட்டோம், நாங்கள் ஒற்றுமையாக இக்கிறோம், ஒற்றுமையாக இருப்போம் என்று உலகிற்கு உணர்த்திய உத்தபுரம் மக்களுக்கும் குறிப்பாக ஹரிஜன, பிள்ளைமார் சமுதாயப் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு ஜாதி பிரச்சனையைத் தீண்டாமைப் பிரச்சனையாக மாற்றி, தலித் விரோதமாகச் சித்தரித்து ஊதி ஊதி பெரிதாக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஆலயத்திற்குச் சென்று ஹரிஜனங்கள் வழிபாடு செய்ய முயற்சி எடுத்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க், துணை கண்காணிப்பாளர் மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் தினகரன், ஆவின் முன்னாள் பொது மேலாளர் கே.ஆதிமூலம், விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சின்மயா சோமசுந்தரம், எழுமலைப் பண்ணையார் எஸ்.ஏ. நடராஜ தேவர், பா.ஜ.கவைச் சேர்ந்த பொன்.கணாநிதி, ரவிக்குமார் ஆகியோரைப் பாராட்டுகிறோம்.
ஹரிஜன மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு இந்து இயக்க பெரியோர்களை அணுகியதால்தான் இந்த பிரச்சனைக்குச் சுமூகத் தீர்வு ஏற்பட்டது.
உத்தபுர மக்களின் இரு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற காவல்துறை எடுக்கும் முயற்சிக்கு மாவட்ட வருவாய்த் துறையும், மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு நல்கிட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
உத்தபுரம் முத்தாலம்மன் ஆலயப் பிரவேசம் முடிவல்ல; நல்ல தொடக்கம் தான், நிரந்தர தீர்வு ஏற்பட தமிழக அரசு இரு சமுதாயப் பெரியோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நியாயம் கிடைத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
சமாதான முயற்சிக்கு பாடுபட்ட பெரியோர்களுக்குச் சமுதாய நல்லிணக்க விருது வழங்கி கௌரவிக்க தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
உத்தபுரம் விஷயத்தில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எடுக்கும் நடவடிக்கைக்கு இந்து முன்னணி என்றும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications