கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு மகாராஷ்டிர அரசு நிறுவனம் ரூ. 400 கோடி உதவி!

கிங்பிஷர் நேற்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில், கடந்த மூன்று மாதங்களில் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர்) மட்டும் ரூ. 469 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் சரிந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நஷ்டம் ரூ. 231 கோடியாக இருந்ததாகவும், அது இந்த ஆண்டு இரண்டு மடங்காகிவிட்டதாகவும், இதற்கு முக்கிய காரணம் விமான எரிபொருள் விலை உயர்வே என்றும் கிங்பிஷர் தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டு காலத்தில் மட்டும் எரிபொருளின் விலை 70 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, ரூ. 817 கோடி செலவு வைத்துவிட்டதாகவும் அந்த நி்றுவனம் கூறியுள்ளது.
இந் நிலையில், இந்த நிறுவனத்தின் கிங்பிஷருடன் தொடர்புடைய 4 நிறுவனங்களுக்கு Sicom நிறுவனம் ரூ. 400 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த Sicom நிறுவனத்தில் மகாராஷ்டிர அரசுக்கு 49 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்துவது, விமானங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கிங்பிஷர் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. மேலும் நிறுவனத்துக்கு மேலும் கடனுதவி வழங்குமாறும் வங்கிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனத்தில் ரூ. 2,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ள ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்து மேலும் கடன் கோரவும் கிங்பிஷர் இயக்குனர்கள் குழு திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில், கிங்பிஷர் தானாகவே ரூ. 800 கோடியளவுக்கு நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும், நஷ்டத்திலிருந்து வெளியே வருவது குறித்து சரியான திட்டத்தை முன் வைக்க வேண்டும் என்றும், அதுவரை கிங்பிஷருக்கு புதிய கடன் ஏதும் தருவதில்லை என்றும் 13 வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
மேலும், கிங்பிஷருக்கு இனிமேல் வரும் வருவாயை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இந்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கொடுத்த கடனுக்காக வட்டி மற்றும் அசலை வசூலிப்பதற்காக இந்த முடிவை அந்த வங்கிகள் எடுத்துள்ளன.
இதற்கிடையே மும்பையில் நேற்று கூடிய கிங்பிஷர் இயக்குனர்கள் குழுக் கூட்டம் இன்றும் தொடர்ந்தது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications