மாலேகான் குண்டுவெடிப்பு-7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகாலமாக இவர்கள் ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து 9 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதாக கோர்ட் அறிவித்தது.
கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 5 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கோர்ட், 7 பேரை ஜாமீனில் விடுவி்க்க உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் 7 பேரும் வெளிநாடு போகக் கூடாது என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
மற்ற இருவருக்கும் வேறு குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவர்களால் விடுதலையாக முடியவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, தீவிரவாத தடுப்புப் பிரிவு கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications