For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடல்நலக் கோளாறு: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Google Oneindia Tamil News

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உடல் நிலை சரியில்லாததால் 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முயற்சியில் உயிர் இழந்தார்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கட்டையன் புதூரைச் சேர்ந்த அந்தோணி மகன் பிலவேந்திரன். அவருக்கு முத்துமாலை என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். பிலவேந்திரனுக்கு பல ஆண்டுகளாக நரம்புத் தளர்ச்சி நோய் இருந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வலிப்பு வரும். மேலும் சர்க்கரை மற்றும் குடல்வால்வு நோயும் இருந்துள்ளது. அவரால் பிறர் துணையில்லாமல் நடக்க முடியாது. இதனால் மனமுடைந்த அவர் 7 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் இப்படி தற்கொலைக்கு முயல்வதால் குடும்பத்தாரில் யாராவது ஒருவர் எப்பொழுதும் அவரை கண்காணி்த்துக் கொண்டே இருந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரைக் காப்பாற்றி இனி தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது என பிள்ளைகள் மீது சத்தியம் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவதன்று அவரது மனைவி துஷ்டி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பிலவேந்திரன் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டு பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A nervous disorder patient Bilavendran has hanged himself to death in his house in Srivaikuntam. Earlier he tried to commit suicide 7 times unsuccessfully and finally died in the 8th attempt. He didn't like to live depending on others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X