தொண்டர் வெடித்த ஜிகினா வெடி பட்டு தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் கண்ணில் காயம்
தென்காசி: சமக நிறுவனரும், தென்காசி எம்.எல்.ஏ.வுமான சரத்குமாருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையார்தவணை மீனாட்சிபுரம் பகுதியில் சமக நிறுவனரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்குள்ள ராமர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே தொண்டர்கள் புடை சூழ மாலை 3.30 மணியளவில் வந்துள்ளார்.
அப்போது ஆர்வக் கோளாறுடன் கட்சி தொண்டர் ஒருவர் பிராப்பர் என்று அழைக்கப்படும் சீனா அலங்கார ஜிகினா வெடியை சரத்குமார் முகத்திற்கு நேராக வைத்து திருகியுள்ளார். அந்த ஜிகினா வெடி அவரது முகத்தில் பட்டு கண்ணை பதம் பார்த்துள்ளது. காயமடைந்த அவரை தென்காசியிலுள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது.
அதன் பிறகு நெல்லையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு சென்று சிகி்ச்சை பெற்றார். கட்சி தொண்டரின் ஆர்வக் கோளாறால் சரத்குமார் கண்ணில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications