கட்டண உயர்வு எதிரொலி: இனிமேலாவது பஸ்ஸில் வசதிகள் அதிகரிக்குமா என பயணிகள் எதிர்பார்ப்பு!
சென்னை: கிட்டத்தட்ட ஆம்னி பஸ்களுக்கு இணையான கட்டணத்தை கொண்டு வந்து விட்டது தமிழக அரசு. இனிமேலாவது அரசு பஸ்கள் சிறப்பான முறையில் பயணிகளுக்கு சேவை புரியுமா, குறைந்தபட்சம் மூட்டைப் பூச்சி இல்லாமல் பஸ் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
அரசு பஸ்களுக்கான கட்டண உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டது. தனியார் பஸ்களுக்கு நிகரான கட்டண உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் ரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்த விலை உயர்வுக்கு மத்தியிலும், அரசு பஸ்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றிலும் போய் விடவில்லை. இனி்மேலாவது பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அல்ட்ராடீலக்ஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு படு ஓட்டையான பஸ்களை ஓட்டி வரும் செயலை அரசு நிறுத்த வேண்டும் (சமீபத்தில் சென்னையிலிருந்து இப்படி ஒரு பஸ்ஸை நாகை மாவட்டத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கியது. இதையடுத்து மக்கள் பஸ்ஸை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.)
மூட்டைப் பூச்சித் தொல்லை இல்லாத வகையில் பஸ்களை சுத்தபத்தமாக வைத்துக் கொள்வது.
பஸ்சுக்குள் ஏறியவுடனேயே முடை நாற்றம் வீசும் அளவுக்கு ஆரோக்கியக் குறைவு இருப்பதை மாற்றி சுகந்தமான, ஆரோக்கியமான சூழலுடன் கூடிய பஸ்களை இயக்குவது.
அடிக்கடி விபத்துக்களில் சிக்காமல் பஸ்களை செலுத்துவது, அடிக்கடி பஸ்கள் பழுதடையாமல் பார்த்துக் கொள்வது, பயணிகள் உட்கார்ந்து சவுகரியமாக பயணிப்பதற்கு ஏற்ற சீட் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் எழுந்துள்ளன.
தற்போதைய கட்டண உயர்வுக்குப் பின்னர் அரசு பஸ்களுக்கும், தனியார் ஆம்னி பஸ்களுக்கும் இடையிலான கட்டண வித்தியாயசம் கிட்டத்தட்ட ரூ. 80 என்ற அளவில்தான் உள்ளது. எனவே கட்டண உயர்வுக்குப் பின்னர் பாதி ஆம்னி பஸ்களாக மாறியுள்ளன அரசு பஸ்கள். ஆனால் தனியார் ஆம்னி பஸ்களில் உள்ள வசதிகளில் ஓரளவாவது அரசு பஸ்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications