15 நாட்களுக்குள் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் - பாஜக

இந்தியர்கள், வருமான வரியை சரியான முறையில் கட்டாமல், வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைத்திருப்பதாக எழுந்த திடீர் சந்தேகத்தின் பேரில், சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்ற, சிபிஐ யின் திடீர் சோதனையின் மூலம், சுவிஸ் வங்கிகளில் இருந்து, ரூ. 150 கோடி மீட்கப் பட்டது. இதனையடுத்து, இந்தியாவின் கவனம், ஜெனிவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சிவங்கியின் மீது திரும்பியுள்ளது.
இதற்கிடையே, புது டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் எம் பியுமான யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது:
கருப்பு பண விவகாரத்தில் 800 இந்திய தலைவர்கள் சிக்கியருப்பதாகவும், அவர்களுள் 782 தலைவர்களின் பெயர், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தெரியும் என்றும் கூறினார்.
15 நாள் கெடு
எனவே அந்த தலைவர்களின் பெயர்களை, 15 நாட்களுக்குள் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டுமென கெடு விதித்துள்ளார். அடுத்த குளிர்கால கூட்டத் தொடர் நல்ல முறையில் நடக்க வேண்டுமெனில் பிரணாப் முகர்ஜி அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications