காற்றழுத்தம் உருவாகும் அறிகுறிகள்-அடுத்த 48 மணி நேரத்தில் தொடர் மழை -வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

Rain
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கு மழை பெய்துள்ளது. அதிக அளவாக ராமேஸ்வரம், பாம்பன், வேதாரண்யம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. உட்புறத் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. தரைக்காற்று சில நேரங்களில் பலமாக வீசக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம். தரைக்காற்று பலமாக வீசக் கூடும்.

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+