கர்நாடகாவில் பெண்கள் முன் நிர்வாண போஸ் கொடுத்த விவசாயிக்கு தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பெண்கள் முன் நிர்வாணமாக நடமாடி வந்த நபரை பிடித்து பொதுமக்கள், மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள திம்மாபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டேஷ் (45). விவசாயி. அப்பகுதியில் உள்ள சாலையில் கோட்டேஷ் நடந்து செல்லும் போது எதிரே பெண்கள், கல்லூரி மாணவிகள் யாராவது வந்தால் உடனே தனது ஆடைகள் முழுவதையும் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுப்பது வழக்கம்.

இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள் இவரது கண்ணில் படாமல் தப்பியோடி விடுவர். இந்த நிலையில் சம்பவத்தன்று கோட்டேஷ் சாலையில் நடந்து சென்ற போது எதிரே ஒரு பெண் வந்துள்ளனர். இதனை கண்ட கோட்டேஷ் வழக்கம் போல தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார்.

இதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண் நடந்து சென்றார். அதனால் ஏமாற்றமடைந்த கோட்டேஷ், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுந்து சில்மிஷம் செய்ய முயன்றார். உடனே பயந்துபோன அந்த பெண் கூச்சலிட ஆரம்பித்தார்.

அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கோட்டேஷை பிடித்து அடித்து உதைத்தனர். அதிலும் ஆத்திரம் அடங்காத மக்கள், கோட்டேஷை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு தூக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் அவரை கட்டி வைத்து மீண்டும் அடித்து உதைத்தனர்.

இதில் படுகாயமடைந்த கோட்டேஷை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். பின்னர் கோட்டேஷை மக்களிடம் இருந்து மீட்டு, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+