துரைமுருகன் வீடு, வாட்டர் நிறுவனம், கல்லூரி, சிகரெட் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

இந்த திடீர் ரெய்டு காரணமாக துரைமுருகன் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொத்தம் 9 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. சென்னை மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
காட்பாடியில்உள்ள துரைமுருகனுக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அவருக்குச் சொந்தமான அருவி மினரல் வாட்டர் நிறுவனம், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி ஆகியவை சோதனை நடைபெறும் இடங்களில் சில.
சென்னையில் உள்ள துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
அதேபோல துரைமுருகனுக்குச் சொந்தமான ஐடிசி சிகரெட் கிட்டங்கியிலும் சோதனை நடந்து வருகிறது.
வண்டலூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
இதேபோல துரைமுருகனின் உறவினர்கள் சிலரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை முடிவில் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, கேபிபி சாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது துரைமுருகனும் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications