For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டர் சட்டத்தில் விடுதலையான பூண்டி கலைவாணன் மீண்டும் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் மாவட்டசெயலாளர் கலைவாணன் நில அபகரிப்பு மோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை யான நிலையில் ரபீக் என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்ய முயன்றதாக திருவாரூர் போலீசாரால் மீண்டும் கைது செய்யப் பட்டார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
The Tiruvarur District DMK Secretary was re arrested shortly after being released on goondas act from the Palayamkottai prison here. A police team from Tiruvarur arrested Poondi P Kalaivanan, who was eleased yesterday by Madras HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X