சுகராமைத் தாக்கியதுமே தாக்கியவரை சிறையில் போடாதது ஏன்?- கனிமொழி கோபம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மீதான தாக்குதல் குறித்து கனிமொழியும், ராசாவும் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டனர்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு இருவரும் வந்தபோது அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சரத் பவார் தாக்கப்பட்டது குறித்து அவர்களிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியும், வியப்பும் வெளியிட்டனர்.
கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கே நடந்தது இந்த சம்பவம்? இதே நபர்தான் முன்னாள் அமைச்சர் சுக்ராமைத் தாக்கியவர் என்றால், சுக்ராமைத் தாக்கியதுமே இவரை ஏன் சிறையி்ல போடவில்லை என்று கோபமாக கேட்டார்.
சுக்ராமுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ராசாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் மிகவும் வயதானவர். சிறையில் நான் அவரை சந்தித்துப் பேசினேன் என்றார்.












Click it and Unblock the Notifications