கரூரில் சட்ட விரோதமாக செயல்பட்ட 138 சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

டெக்ஸ்டைல் தொழிலின் சார்புத் தொழிலான சாயப்பட்டறைகள் அதிகளவில் கரூரில் செயல்பட்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமார் 500 சாயப்பட்டறைகளும், சட்ட விரோதமாக சுமார் 500 சாயப்பட்டறைகளும் செயல்பட்டு வருகின்றது.
சாயப்பட்டறைகள் தங்களின் சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால் பல சாயப்பட்டறைகளில் கழிவுநீரை அறிவியல் முறைப்படி சுத்தம் செய்யாமல் அப்படியே அமராவதி ஆற்றில் வெளியேற்றி வந்தனர். இவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன்பேரில் முறையாக சாயக் கழிவுகளை வெளியேற்றாத சாயப்பட்டறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் முறையாக செயல்படாத சின்னான்டாங்கோவில், பெரிய ஆண்டான் கோவில், திருமாநிலையுர், அருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த சுமார் 138 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications