அந்நிய நேரடி முதலீட்டினால் வேலை வாய்ப்பு பெருகும் – மத்திய அரசு பிரச்சாரம்

ஆனால் இவற்றைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் எக்கச்சக்க நன்மைகள் ஏற்படும் என்று விளம்பரப்படுத்தி வருகிறது.
சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் வரை அனுமதிக்கும் கடந்த நவம்பர் 24 ம் தேதி அறிவிப்பை மத்திய அமைச்சரவை அறிவித்தது.
இந்த அறிவிப்பிறகு பாஜாக, உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கூட்டணி அரசில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டினை அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு லாபமும், வேலை வாய்ப்பும் பெருகும் என்று மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் முழு பக்கம் விளம்பரம் கொடுத்துள்ளது.
வியாபாரிகளுக்கு பயன்
அந்நிய நேரடி முதலீடு கடைகளால் சிறுவணிகர்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பது அச்சம். ஆனால் அரசு கொடுத்துள்ள விளம்பரத்தில் சிறு வணிகர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையில் மொத்தமாக இந்த வெளிநாட்டு கடைகளில் இருந்து மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்து, சீனா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில்லரை வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
அந்நிய நேரடி முதலீட்டு கடைகளால் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும் என்பது அச்சம். ஆனால் அரசு கொடுத்துள்ள விளம்பரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதினால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குப் பயன்
விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது அச்சம். ஆனால் விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருளுக்கான முழு பலனையும் பெருவார்கள் என்று அரசின் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications