For Daily Alerts
Just In
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது!
இடுக்கி: கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்,அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அனையின் நீர் மட்டம் 136.4 அடியாக உயர்ந்துள்ளது. இது தான் அணையின் முழுக் கொள்ளளவாகும்.
அணை நிரம்பி விட்டதால், அணையின் 13 இடங்களில் நீர் கசிவும் அதிகமாகியுள்ளது.
அணையில் இருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏராளமான மக்கள் மேடான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
Comments
English summary
Water level at Mullaperiyar dam has reached its storage capacity of 136 feet yesterday, as the catchment areas face heavy rains.
Story first published: Tuesday, November 29, 2011, 10:55 [IST]