For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5,000 திமுகவினர் 'அம்மா'விடம் சரண்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் திமுகவைச் சேர்ந்த 5,000 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 திமுகவினர் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைய முடிவு செய்தனர். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து 100 பஸ்களில் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நேற்று மாலையில் முதல்வர் ஜெயலலிதா முன் நடந்த நிகழ்ச்சியில் 5,000 பேரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முருகன் எம்.எல்.ஏ. செய்திருந்தார்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு மக்களுக்கு சிறப்பான திட்டங்களை அளித்துள்ளது. இதனால் தான் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டதாக புதிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

English summary
5,000 DMK workers from Ramnad have reached Chennai in 100 buses. They met ADMK chief cum CM Jayalalithaa and ditched DMK for the ruling party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X