4வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர் ஸ்ட்ரைக்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஸ்ட்ரைக் நான்காம் நாளாகத் தொடர்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்திய புகாரின் பேரில், இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை பிடித்துச் சென்றனர்.
இந்த 5 பேரையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சிறை்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை தரப்புடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications