4வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர் ஸ்ட்ரைக்!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஸ்ட்ரைக் நான்காம் நாளாகத் தொடர்கிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்திய புகாரின் பேரில், இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை பிடித்துச் சென்றனர்.

இந்த 5 பேரையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிறை்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை தரப்புடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+