திராவிடக் கட்சிகள் 45 வருடமாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி விட்டன: அன்புமணி
சேலம்: எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறோம். பாமக ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து சாராயமே இல்லாமல் செய்வதாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும் என்றார் அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி.
சேலம் கோட்டை மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அன்புமணி,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சிலர் பொய் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்த நாம் தோற்றோம். இப்போது தனியாக நிற்கிறோம். தனியாக நின்றதால் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
இனி வரும் காலங்களில் பாமக. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும். பாட்டாளி மக்கள் கட்சி வித்தியாசமான கட்சி. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. இனி யாருடனும் கூட்டு சேர மாட்டோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான சுகாதாரம் தருவோம். படித்த இளைஞர்களுக்கு வேலை தருவோம். விவசாயத் தொழில் வளர உதவி செய்வோம்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறோம். நாங்கள் தரமான கல்வியை தருவோம். சிறந்த நிர்வாகத்தை தருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து சாராயமே இல்லாமல் செய்வதாகத்தான் இருக்கும். ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து தருவோம். தமிழக முன்னேற என்னென்ன செய்ய முடியுமோஅதை அனைத்தையும் செய்து தருவோம். வெளிநாட்டினர் தமிழகத்தை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு தமிழகத்தை முன்னேற்றி காட்டுவோம்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவோம், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம். இதன் மூலம் சுமார் ரூ.50,000 கோடி லாபம் கொண்டு வரச் செய்வோம்.
இப்போது மணல் அனைத்தும் கேரளாவிற்கு செல்கிறது. அதைத் தடுப்போம். இதுபோன்ற மாற்றங்களை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே செய்ய முடியும்.
திராவிடக் கட்சிகள் நிறைய தவறுகளை செய்துள்ளன. 45 வருடமாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி விட்டனர்.
அணு உலை யாரும் கேட்கவில்லை. ஆந்திராவில் அணு உலை இல்லை. கேரளாவில் அணு உலை இல்லை. ஏன் இங்கு மட்டும் அணு உலை கொண்டு வர வேண்டும்?. நாங்கள் இதை கொண்டு வரவில்லை. திராவிட கட்சிகள்தான் இதைக் கொண்டு வந்தன என்றார்.
-
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications