கேரளாவில் வன்முறைப் போராட்டங்கள்-மாநில எல்லையில் தமிழக அதிரடி போலீஸ் குவிப்பு
தேனி: கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, தமிழக, கேரள எல்லைப் பகுதியில் தமிழக அதிரடிப் படைப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை வைத்து அங்குள்ள அரசியல் கட்சியினர் கேரள மக்களைத் தூண்டி விட்டு போராட்டங்களை அதிகரித்து வருகின்றனர். பிரவோம் இடைத் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு காங்கிரஸும், இடதுசாரி முன்னணியும் இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறிவருகிறது. 2 நாட்களுக்கு முன்பு கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தினர்.
அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.
அதேபோல முல்லைப் பெரியாறு அணைக்கு வாகனங்கள் செல்லும் பாதையான வண்டிப்பெரியாறு அருகே உள்ள வல்லக்கடவில் நேற்று காலை பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி இடது புறத்தில் பேபி அணை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்திய அவர்கள், பேபி அணையை உடைத்து, வாய்க்கால் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்காக, ஒரு குழுவினர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கைகளில் ஆயுதங்களுடன் வந்த பா.ஜ.க. இளைஞர் அணியினரை தடியடி நடத்தி தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இத்தகைய வன்முறைச் செயல்களால் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் பதட்டம் தொடர்கதையாகியுள்ளது.
இதையடுத்து எல்லைப் பகுதியில் அதிரடிப்படையை நிறுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்ட எஸ்.பி. பொறுப்பை வகிக்கும் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் அதிரடிப்படைப் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு குறித்து டிஎஸ்பி செல்வராஜ் கூறுகையில், கேரளாவில் நடந்து வரும் வன்முறைப் போராட்டங்கள் தமிழகத்திற்கும் பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேனி மாவட்ட எல்லையான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மெட்டு ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளிலும் நேற்று மாலை முதல் துப்பாக்கி ஏந்திய அதி விரைவுப்படை போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications