உயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா?: வழக்கறிஞர் மறுப்பு

இந்த வழக்கில் ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, மூத்த தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கனிமொழி, சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி மற்றும் 5 தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் உள்பட 12 பேர் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
ராசா, தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளான சித்தார்த் பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மட்டுமே சிறையில் உள்ளனர். இதில் சந்தோலியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதை டெல்லி உயர் நீதிமன்றம் இதில் தானாகவே தலையிட்டு ஜாமீனை நிறுத்தி வைத்தது. ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த ஜாமீன் உறுதி செய்யப்படுமா என்பது நாளை டெல்லி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்தது.
இந்த வழக்கில் கைதான 14 பேரில் இதுவரை ஜாமீன் மனுவே தாக்கல் செய்யாதது ராசா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால், பாதுகாப்புக்காகத் தான் அவர் ஜாமீனே கோரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை அவரது வழக்கறிஞர் சுகில்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானும் கூட இந்தக் கதைகளைக் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தச் செய்திகளில் உண்மையில்லை, அது வெறும் புரளி தான்.
அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து அடுத்து ராசா மனு தாக்கல் செய்வார்.
ராசா, பெகுரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வெவ்வேறானவை. என்றாலும் அவரது ஜாமீன் மனு மீது என்ன தீர்ப்பு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதுவரை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு ராசாவுக்கு எந்த யோசனையும் நான் தர மாட்டேன் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications