முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சுப்பிரமணியசாமி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக எந்த தடை உத்தரவும் இல்லை. ஆனால் இது தொடர்பாக அதிமுக, திமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தீய சக்திகள் பிரச்சனையை கிளப்பி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். எனவே உடனடியாக பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நல்ல முறையில் செல்கிறது. குற்றவாளியான கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததை விடுதலையே கிடைத்தது போன்று திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அடுத்த விசாரணையின் போது கனிமொழியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

2 ஜி ஸ்பெக்ட்ராம் வழக்கில் ராசா மீது குற்ற்ச்சாட்டு உள்ளது போல மத்திய அமைச்சர் சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டுள்ளது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+