முல்லைப் பெரியாறு- ப.சிதம்பரம்- எஸ்.எம்.கிருஷ்ணாவால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி

Subscribe to Oneindia Tamil

Mullaperiyar Dam
டெல்லி: முல்லைப் பெரியாறு, அமைச்சர்கள் ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பெரும் அமளி ஏற்படவே இரு அவைகளும் பிற்பகல 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் குதித்தன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள எம்.பிக்கள் இரு அவைகளிலும் முழக்கமிட்டனர். பதிலுக்கு திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டனர்.

அதேபோல 2ஜி வழக்கில் தொடர்புடைய ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியும், சுரங்க ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விலக வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் அமளியில் இறங்கினர்.

இந்த அமளிகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பமாக இருந்தது. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரைக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+