For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரியில் கேரள பஸ்களை மறித்து நாம் தமிழர், பெரியார் தி.க போராட்டம்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கேரளாவிலிருந்து பெங்களூர் சென்ற தனியார் மற்றும் அரசு பஸ்களை கிருஷ்ணகிரியில் மறித்து நாம் தமிழர், பெரியார் திராவிடர் கழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி சோதனைச் சாவடியில் இன்று காலை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பெங்களூர் செல்லும் கேரளாவைச் சேர்ந்த தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் வந்தன.

அவற்றை தமிழ் ஆர்வலர்கள் மறித்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். கேரள அரசைக் கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர்.

போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் கேரள பஸ்களை மொத்தமாக நிறுத்திதமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான அத்திபலே வரை பாதுகாப்பு அளித்து கொண்டு போய் விட்டனர்.

English summary
Naam Tamilar, PDK cadres sieged Kerala buses near Krishnagiri check post and protested agains the attacks on Tamils in Kerala. Police arrested the cadres and paved way to the Kerala buses bound for Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X