முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மக்களைத் தூண்டும் கேரள கட்சிகள்-அமைச்சர் ராமலிங்கம்

Subscribe to Oneindia Tamil

K V Ramalingam
ஈரோடு: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க அங்குள்ள மக்களை கேரள அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருகின்றன என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஈறோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இந்த விவகாரத்தை அங்குள்ள கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.

பல்வறு பீதியைக் கிளப்பி அணையை இடிக்க மக்களை தூண்டி விட்டு வருகிறார்கள். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணையை இடிக்க கேரள அரசு முயற்சிக்கிறது என்றார்.

சரி, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கிறதே என்ற கேள்விக்கு ராமலிங்கம் நேரடியான பதிலைத் தரவில்லை. மாறாக,அங்கு புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. பழைய பணிகள்தான் நடந்து வருகிறது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+