சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் மனு நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

Sasikala
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தன்னிடம் தமிழில் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் நான்கு நாட்கள் ஆஜராகி, நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதனையடுத்து இரண்டாவது குற்றவாளியான சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தனக்கு ஆங்கிலம் தெரியாததால், இந்த வழக்கில் தமிழில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யக்கோரி சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவின் மனுவை நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கர்நாடக நீதிமன்றங்களில் ஆங்கிலம், கன்னடம் மட்டுமே வழக்கு மொழியாக இருப்பதால் தமிழில் வாக்குமூலம் பெற இயலாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

இதை எதிர்த்து அப்பீல் செய்ய 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரி சசிகலா இன்னொரு மனு தாக்கல் செய்தார். ஆனால், அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+