மதுரை முத்தூட், மணப்புரம் நிறுவனங்கள் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
மதுரை: மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் முத்தூட் கார்ப், மணப்புரம் நிறுவனம் உள்ளிட்ட மலையாளிகளி்ன் கடைகளை இன்று அடித்து நொறுக்கினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கேரள அரசுககு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பிரிவினர் திடீர் என்று முத்தூட் கார்ப், மணப்புரம் நிறுவனம் உள்ளிட்ட மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கினர்.
மதுரையில் மட்டும் முத்தூட் நிறுவனத்திற்கு 50 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா, திருச்சிற்றம்பலத்தில் உள்ள முத்தூட் நிறுவனமும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்த்து வரும் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதால் அவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல புதுச்சேரியிலும் மலையாளிகளின் நிறுவனங்கள் மீது மாணவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
மதுரையில் மலையாளிகள் நிறுவனங்களை மூட நடவடிக்கை?:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை மதுரையில் உள்ள மலையாளிகளின் நிறுவனங்களை மூடுவது குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியுள்ளார்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராமசாமி தலைமையில் 200 வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். மலையாளிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களை உடனே மூட உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை அந்த நிறுவனங்களைத் திறக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு சகாயம் கூறுகையில், எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. அதனால் இதை அரசின் கவனத்திற்கு கொண்ட சென்ற பிறகு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications