For Daily Alerts
Just In
தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் பாதுகாப்பு அதிகாரி திடீர் மாற்றம்
மதுரை: தமிழக கவர்னர் ரோசைய்யா பாதுகாப்பு அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த நரேந்திரன் நாயர், தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ராஜேந்திரன், தூத்துக்குடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இதுவரை தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பிஎஸ்., அதிகாரிகளை தான் மாற்றி வந்துள்ளது. தற்போது அந்த மாற்றம் தமிழக ஆளுநர் பாதுகாப்பு வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
Tutricorin SP Narendran Nair was posted as the security officer of TN governor Rosaiah.
Story first published: Saturday, December 17, 2011, 10:46 [IST]